கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை பயிற்சியாளர்கள் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு துணை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பயணம் வரும் இலங்கை தொடரில் இருந்து ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக தலைமை பயிற்சியாளராக இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த சமயத்தில், அவருடன் இணைந்து பணியாற்றிய துணை பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் கொல்கத்தா அணியில் கம்பீருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இலங்கை தொடரிலிருந்து இந்திய அணியுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

பீல்டிங் பயிற்சியாளராக டி.திலீப் தொடருகிறார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்