கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 4 பிரிவுகளில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலியே அணிகள் மோதுகின்றன.
இலங்கையின் பல்லகெலே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் இரவு 7 மணிகு தொடங்குகிறது.