image courtesy: PTI  
கிரிக்கெட்

காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

தினத்தந்தி

மும்பை,

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியை எட்டுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று பேட்டி அளித்த அவர், 'கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக உழைத்து வருகிறார். ஜனவரி மாதம் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன்னதாக அவர் முழு உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்து திரும்பியதும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்களின் பதவி காலத்துக்கான ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா