கோப்புப்படம் 
கிரிக்கெட்

கொரோனா குறைந்தவுடன் உள்ளூர் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும்: சவுரவ் கங்குலி

கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

மும்பை,

நாட்டில் கொரோனா பரவல் திடீரென மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூரில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் உள்ளூர் போட்டிகள் நிலைமை கட்டுக்குள் வந்ததும் நடத்தப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்