கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சு தேர்வு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டவுன்ஸ்வில்லி,

ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று காலை தொடங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி ஜிம்பாப்வே அணியின் சார்பில் கயா மற்றும் மருமானி ஆகியோர் முதலாவதாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.