கிரிக்கெட்

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி மீண்டும் தேர்வு

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நரேஷ் ஓஜா, செயலாளராக அவிஷேக் டால்மியா, இணைச் செயலாளராக தேபப்ரதா தாஸ், பொருளாளராக தேபசிஸ் கங்குலி ஆகியோரும் போட்டியின்றி தேர்வானார்கள்.

சவுரவ் கங்குலி 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை தான் இந்த பொறுப்பில் நீடிக்க முடியும். கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் 6 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தால், அதன் பிறகு இடைவெளியிட வேண்டும். கங்குலி 2014-ம் ஆண்டில் இருந்து பெங்கால் கிரிக்கெட் சங்க பொறுப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு