கோப்புப்படம் 
கிரிக்கெட்

வேறு எந்த அணிக்காகவும் விளையாடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது: தீபக் சாகர்

சென்னை அணி தன்னை எடுத்தது குறித்து தீபக் சாகர் மனம் திறந்து பேசியுள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கடந்த சீசன்களில் விளையாடிய தீபக் சாகரை ரூ.14 கோடிக்கு எடுத்தது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில்,

"நேற்றைய ஏலத்தின் போது நாங்கள் (இந்திய அணி) அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தோம். நாங்கள் போனில் ஏலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம், மொத்தக் குழுவும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது நான் ஏலத்தில் வரும் போது, ரூ.14 கோடியை எட்டியபின், இதற்கு மேல் நான் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்குப் பிறகு சி.எஸ்.கே வெளியேறினால், நான் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். ஏனென்றால் நான் சென்னை அணிக்காகவே விளையாட விரும்பினேன். வேறு எந்த அணிக்காகவும் விளையாடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது". இவ்வாறு தீபக் சாகர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்