புதுடெல்லி,
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய விருது விழாவில் கலந்துகொண்ட அவரிடம் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சில கேள்விகளைகேட்டார். 'நான் உங்களிடம் 3 விஷயங்களை சொல்வேன். அதில் ஒன்றைநீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒரே ஓவரில் 6 சிக்சர் ,
கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல்.-ல் குவித்த தனிநபர் அதிகபட்சம் 175 ரன் சாதனை அல்லது ஐ.பி.எல்.-ல் அதிவேக சதம்' இவற்றில்எதை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு சூர்யவன்ஷி, ஐ.பி.எல்.-ல் கெய்லின் 175 ரன் சாதனையை முறியடிக்க விரும்புகிறேன் என்று பதில் அளித்தார்.
மற்றொரு கேள்விக்கு, 'இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே எனது இலக்கு. அணியின் வெற்றிக்கு நிறைய பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன்' என்றும் கூறினார்.