image courtesy: BCCI twitter  
கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

தினத்தந்தி

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்று 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி ஆட்டமிழக்காமல் 94 பந்துகளில் 122 ரன்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 47-வது சதத்தை பதிவு செய்த அவர், 13,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

278 ஒருநாள் போட்டிகளில் 267 இன்னிங்ஸ் விளையாடி 13,000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 13,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்த அவர், அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்