கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; வெற்றி பெற அதிக ரன்கள் தேவை: பேட்டிங் தேர்வு செய்த விராட் கோலி பேட்டி

ஐ.பி.எல். போட்டியின் 10வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ஐ.பி.எல். போட்டியின் 10வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்பொழுது, கடந்த முறை நாங்கள் விளையாடியபொழுது இருந்த மேற்பரப்பினை விட இந்த முறை நல்ல முறையில் உள்ளது.

எங்களுக்கு வெற்றி பெற ரன்கள் அதிகம் தேவை. கிறிஸ்டியன் விளையாடவில்லை. ஆனால், ரஜத் படிதர் எங்கள் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சுழற்பந்து வீசுவதில் திறமையானவர் என்று கூறியுள்ளார். கடந்த முறை பெற்ற தோல்விகளை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் இதனை ஒரு போட்டியாக மட்டுமே கவனத்தில் கொண்டு நாங்கள் விளையாடுவோம் என்றும் கோலி கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்