கிரிக்கெட்

மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 9.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . #IPLAuction #IPL2018 #RR #MitchellStarc #KKR

பெங்களூர்

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம் விடப்படுகிறார்.ரூ 5.20 கோடிக்கு ஷிகர் தவானைஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது.

அஸ்வின், கெயில், ஸ்டோக் உள்ளிட்டோரின் அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை அணி ஏற்கனவே தக்கவைத்துள்ளது .

இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு போக வாய்ப்பு உள்ளது.

அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. சென்னை அணி அஸ்வினை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

கிறிஸ் கெய்ல் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியும் கேட்கவில்லை.

மேற்கு இந்திய வீரர் பொல்லார்ட் ரூ5.40 கோடிக்கு டெல்லி அணி யால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து வீரர் ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக் ரூ.12. 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

கடந்த முறை ரஹானேவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி.

1.60 கோடிக்கு டூபிளஸ்சியை தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 9.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்