Image Courtesy: @ICC / @BCCI  
கிரிக்கெட்

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதல்

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

பினோனி,

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா (8 புள்ளிகள்) முதலிடமும், பாகிஸ்தான் (8 புள்ளிகள்) 2-வது இடமும், குரூப் 2 பிரிவில் ஆஸ்திரேலியா (7 புள்ளிகள்) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (6 புள்ளிகள்) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த போட்டி தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். இதையடுத்து வரும் 6-ந் தேதி பினோனியில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 8-ந் தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை