கிரிக்கெட்

‘இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்’ - விராட் கோலி வலியுறுத்தல்

வெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பதற்றத்தையும், தயக்கத்தையும் தாண்டி களத்தில் ஜொலித்த விதம், தொடக்க வீரராக களம் கண்ட முதல் தொடரிலேயே தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட அவருக்கே ஒட்டுமொத்த பெருமையும் சேரும். இவ்வாறு கோலி கூறினார்.

டோனி குறித்து கங்குலி என்னிடம் இதுவரை பேசவில்லை - கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம், டோனி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது டோனி இங்கு தான் இருக்கிறார். வீரர்கள் அறைக்கு சென்றால் நீங்கள் அவரிடம் ஹலோ சொல்லலாம் என்று சிரித்தபடி கூறினார். மேலும் அவர் கூறுகையில், கங்குலிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக வந்து இருப்பது சிறப்புக்குரியது. ஆனால் டோனியின் எதிர்காலம் குறித்து அவர் என்னிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக அவருக்கு தேவை ஏற்படும் போது என்னிடம் பேசுவார். இது குறித்து பேச அழைக்கும் போது கங்குலியை சந்திப்பேன் என்றார்.


திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை