கிரிக்கெட்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: லாகூர் அணி வீரர் கிறிஸ் லின் சதம் அடித்து அசத்தல்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில், லாகூர் அணி வீரர் கிறிஸ் லின் சதம் அடித்து அசத்தினார்.

லாகூர்,

5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ்- லாகூர் காலண்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த முல்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 70 ரன்கள் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய லாகூர் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ் லின் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) 113 ரன்கள் (55 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி அமர்க்களப்படுத்தினார். பி.எஸ்.எல். போட்டியில் லாகூர் அணி வீரர் அடித்த முதல் சதம் இது தான். இந்த வெற்றியின் மூலம் லாகூர் அணி முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. கொரோனா பரவல் காரணமாக, ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு