கிரிக்கெட்

அதிகமுறை ஆட்ட நாயகன் விருது- ரோகித் சர்மாவுடன் இணைந்த பாண்டியா

ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார்

மும்பை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத் தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

டி20 உலகக் கோப்பையில் இது அவரின் 3-வது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதன்மூலம் ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

விராட் கோலி 8 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்று 2-வது இடத்தில் உள்ளார்.