image courtesy; PTI 
கிரிக்கெட்

பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்த கெய்க்வாட்..!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் மோடிக்கு கெய்க்வாட் பரிசளித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா முதன் முறையாக 28 தங்கம் உட்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய கெய்க்வாட் தங்கம் வென்ற வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்