கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

தினத்தந்தி

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தொடரை தள்ளிவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவு செய்து நேற்று அறிவித்துள்ளன. இந்த போட்டி தொடருக்கான புதிய தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதில் ஒருநாள் போட்டி தொடர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய ஒருநாள் லீக் போட்டியின் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஜேக்யூஸ் பால் கருத்து தெரிவிக்கையில், போட்டியை தள்ளிவைத்து எடுத்து இருக்கும் முடிவு வேதனை அளிக்கிறது. எங்களது சர்வதேச போட்டி அட்டவணை அனுமதிக்கும் பட்சத்தில், சகஜ நிலை திரும்பியதும் விரைவில் இந்த போட்டி தொடர் மீண்டும் நடத்தப்படும் என்றார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்