கிரிக்கெட்

பகலிரவு டெஸ்டில் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம்: கபில் தேவ் சாதனையை முறியடித்தார்

இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ரிஷப் பண்ட் புதிய சாதனையை படைத்தார்.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 107 ரன்னுக்கு சுருண்டது.

இதனை தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாடிய நிலையில், நெருக்கடியுடன் களமிறங்கிய ரிஷப் பண்ட், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். அவரின் அதிரடியால் டெஸ்ட் போட்டியை டி20 போட்டியாக மாற்றினார்.

அவர் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு கபில் தேவ் 30 ரன்களில் அரைசதம் அடித்ததே சாதனையக இருந்தது.

சர்வதேச அளவில் டெஸ்டில் அதிவேகமாக அரைசமடித்தவர்களின் பட்டியலில் பண்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார் முதலிடத்தில் ஷாகித் அப்ரிடி (26 பந்துகளில் அரைசதம்) உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து