தோஹா,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து வங்காளதேசம், இலங்கை அணிகளும், பி பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இதனையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இறுதிப்போட்டி 23-ம் தேதி நடைபெற உள்ளது.