image courtesy: AFP 
கிரிக்கெட்

ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியை சேர்ந்தவர் தேர்வு

மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்து இருந்தது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்து இருந்தது.

அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளரான மார்க் ஆடிர், இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை அணியை சேர்ந்த கமிந்து மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான ஆஷ் கார்ட்னர், இங்கிலாந்து பேட்ஸ்மேனான மாயா பவுஷிர் மற்றும் நியூசிலாந்து ஆல் ரவுண்டரான அமெலியா கெர் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

இவர்களில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக மாயா பவுஷிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...