கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் இலங்கைக்கு இது வாழ்வா-சாவா மோதல் என்பதில் சந்தேகமில்லை.
சூப்பர்8 சுற்றில் நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானு டன் மோத இருந்தது. ஆனால் அந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி பெற்றது. நியூசிலாந்து அணியும் மீதமுள்ள இரு ஆட்டத்திலும் வெற்றி கண்டால் சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழையலாம். அத னால் அவர்களுக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது.