மும்பை,
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
மும்பை டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.