கிரிக்கெட்

விராட்கோலி-ரோகித் சர்மா இடையே பிளவு எதுவும் இல்லை - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

‘கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா இடையே பிளவு எதுவும் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

தினத்தந்தி

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணி மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த மாதிரி நன்றாக விளையாடும் அணிக்கு ஆதரவாக எல்லோரும் இருக்க வேண்டியது முக்கியம். அதனை விடுத்து தொல்லை கொடுக்கக்கூடாது. இந்திய அணி இதுபோல் நிலையாக சிறப்பான ஆட்டத்தை அளித்ததை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. 1980-களில் வெஸ்ட்இண்டீஸ் அணியும், 2000-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியும் அபாரமாக செயல்பட்டது போல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனை ஏற்கனவே செய்ய தொடங்கி விட்டோம். 20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

உலக கோப்பை போட்டி முடிந்ததும் கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியானது. வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு முன்பு தங்களுக்குள் பிரச்சினை எதுவும் இல்லை என்று விராட்கோலி மறுப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?