சென்னை,
தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 24வது லீக் ஆட்டம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இதில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது. கவுசிக் (10), ஜெகதீசன் (9), ஸ்ரீனிவாசஸ் (7) மற்றும் சுஜய் (9) ரன்களில் ஆட்டமிழந்து உள்ளனர். ரவிஸ்ரீனிவாசன் 14 ரன்கள் மற்றும் சதீஷ் 5 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.