கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணியை பந்தாடியது திண்டுக்கல்

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை சந்தித்தது.

தினத்தந்தி

இதில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் (52 ரன்), விவேக் (59 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய சேலம் அணி 18.4 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் திண்டுக்கல் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

இன்றைய ஆட்டங்களில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.30 மணி), மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்