கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

புலவாயோ,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் ‘சூப்பர்6’ சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

இந்த நிலையில் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றின் கடைசி ஆட்டம் புலவாயோவில் இன்று (பிற்பகல் 1 மணி) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதன் முடிவில் அரையிறுதிக்கு தகுதி பெறும் கடைசி அணி எது? என்பது தெரியவரும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

மார்க்கெட் நடுவே கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்... உள்ளே நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் - பீகாரில் பரபரப்பு

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய புதுப்பெண்: கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி புதுச்சேரி வருகை

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: 4-ந்தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி