Image Courtesy: @BCCIdomestic  
கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிராபி இறுதிப்போட்டி; ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு..!

அரையிறுதி ஆட்டங்களில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

தினத்தந்தி

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு - அரியானா, ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோதின. இதில் அரியானா அணி தமிழ்நாட்டையும், ராஜஸ்தான் அணி கர்நாடகாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதையடுத்து சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் ராஜஸ்தான் - அரியானா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து