கிரிக்கெட்

ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி...!

ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி ஆவார்.

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்றது. இதில், இந்தியா - நியூசிலாந்து மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது. இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் விராட் கோலி 95 ரன்களை குவித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவிப்பு பட்டியலில் இந்தியாவின் விராட்கோலி (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 354 ரன்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ரோகித் சர்மா (311 ரன்) உள்ளார்.

இந்நிலையில் ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களையும் விராட் கோலி கடந்துள்ளார். இந்த தொடரில் அவர் அடித்த  354 ரன்களையும் சேர்த்து மொத்தம் 3054 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் ஐ.சி.சி தொடரில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு