கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை - டோனி சூசகம்

ஐபிஎல் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற போவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் எழுந்து வருகின்றன.

அபுதாபி,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற டோனி, நடப்பு தொடரோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக பரவலாக ஊகங்கள் எழுந்தன. ஒவ்வொரு போட்டி முடியும் போது, இளம் வீரர்களுக்கு தனது ஜெர்சியை கையெழுத்திட்டு அளித்தார். இதை வைத்து சமூக வலைத்தளங்களில் டோனி ஓய்வு பெற இருக்கிறாரா? என ஊகங்களை எழுப்பினர்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்வின் போது டோனியிடம் இது பற்றி வர்ணணையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த டோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் எனக்கு இது நிச்சயமாக கடைசி போட்டி இல்லை எனக்கூறி ஓய்வு பெற மாட்டேன் என்பதை சூசகமாக கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு