image courtesy:twitter/@wplt20 
கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் எப்போது தெரியுமா..?

இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

5 அணிகள் பங்கேற்கும் 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இறுதி ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் இருந்து 73 வீராங்கனைகள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கிறார்கள். உலகக்கோப்பை போட்டியில் தொடர்நாயகி விருது பெற்ற ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், நியூசிலாந்தின் சோபி டிவைன், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் உள்ளிட்டோர் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி