கால்பந்து

ஊழல் புகார் எதிரொலி; பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு வாழ்நாள் தடை

ஊழல் புகாரில் சிக்கிய பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. #FIFA

தினத்தந்தி

பிரேசில்,

ஊழல் புகார் எதிரொலியாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மார்கோ போலோ டெல் நீரோவுக்கு வாழ்நாள் தடை விதித்து பிஃபா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிஃபாவின் நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை மீறி மார்கோ போலோ பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் ஒளிபரப்பு உரிமைகள், உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் புரிந்துள்ளார் என இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கால்பந்து தொடர்பான விவகாரங்களில் தேசிய, சர்வதேச அளவில் அவர் செயல்பட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும் 1 மில்லியன் யூரோ அபராதம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து