மாலே,
5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 107-வது வகிக்கும் இந்திய அணி, 205-வது இடத்தில் உளள இலங்கையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணியின் தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் குறைவாக தெரிந்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது. முடிவில் இந்த ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத இந்திய அணி, முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்துடன் டிரா கண்டு இருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது.