கால்பந்து

இந்தியா-ஜாம்பியா இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி ரத்து

அணியில் போதுமான வீரர்கள் தயாராக இல்லாததால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக ஜாம்பியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

தோகா,

இந்தியா-ஜாம்பியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் வருகிற 25-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தரவரிசையில் 106-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டிக்கு தயாராகும் விதமாக 87-வது இடத்தில் உள்ள ஜாம்பியாவுடன் மோத இருந்தது.

ஆனால் அணியில் போதுமான வீரர்கள் தயாராக இல்லாததால் இந்த போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக ஜாம்பியா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த இந்தியா-ஜாம்பியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது