Image Courtesy : @FCGoaOfficial 
கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து : மொராக்கோ வீரரை ஒப்பந்தம் செய்த கோவா அணி

கோவா அணி மொராக்கோ கால்பந்து வீரர் நோவாவை 2 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவா,

இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் கோவா எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் கோவா அணி மொராக்கோ கால்பந்து வீரர் நோவா சடாயுவை 2 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் 2024 ஆம் ஆண்டு வரை கோவா அணிக்காக விளையாடுவார்.

கோவா அணிக்கு தேர்வானது குறித்து நோவா கூறுகையில், "எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை கோவா அணியுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணி எனக்குப் புதிதல்ல. நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பேசிக்கொண்டிருக்கிறோம்.

மற்ற நாடுகளில் உள்ள அணிகளில் இருந்தும் எனக்கு அழைப்புகள் இருந்தன. ஆனால் கோவா அணியின் பயிற்சியாளர் என் திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளார். அது தான் நான் அவர்களுடன் சேர்வதற்கான நம்பிக்கையை எனக்கு அளித்தது" என தெரிவித்தார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்