கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் - ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா..!

ஏ.டி.கே. மோகன் பகான் மற்றும் ஐதராபாத் எப்.சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் மற்றும் ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியில் டேவிட் வில்லியம்ஸ் (1 வது நிமிடம்), ஆஷிஸ் ராய் (64 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். இதே போல் ஐதராபாத் எப்.சி அணியில் பர்த்தொலோமேய் (18 வது நிமிடம்), ஜேவியர் சிவெரியோ (90+1 வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்