கோப்புப்படம்  
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் இருந்து விடைபெற்றார் கிரிவெல்லாரோ

சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த ரபேல் கிரிவெல்லாரோ நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியில் இடம்பிடித்திருந்த நடுகள வீரர் 35 வயதான ரபேல் கிரிவெல்லாரோ (பிரேசில்) நேற்று அணியில் இருந்து விடைப்பெற்றார்.

அவர் சென்னை அணிக்காக ஆடிய 54 ஆட்டங்களில் 14 கோல் அடித்திருப்பதுடன், 16 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதே போல் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி. அணியின் நடுகள வீரர் வினித் ராயின் ஒப்பந்தம் காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் அவரும் மும்பை அணியில் இருந்து வெளியேறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்