கால்பந்து

வெளியேறிய போர்ச்சுகல்... ரொனால்டோவுக்காக முகமது சிராஜ் பகிர்ந்த உருக்கமான பதிவு- வைரல்

ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணம் நிறைவுக்கு வந்தது.

டல்லாஸ் ,

போர்ச்சுகல் அணி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பகிர்ந்த உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'சுற்று 16'

டல்லாஸ் மைதானத்தில் நேற்று டைபெற்ற பிபா உலகக் கோப்பை தொடரின் விறுவிறுப்பான 'சுற்று 16' (Round of 16) ஆட்டத்தில், ஸ்பெயின் அணியிடம் 0-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியுடன் ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் நிறைவுக்கு வந்தது.

சிராஜ் உருக்கம்

இதற்கிடையில், இப்போட்டி முடிந்த சில நிமிடங்களில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் ரொனால்டோவுக்காக உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்தார்.

அதில்,

"ஒரு போட்டி ஒரு வீரரின் மகத்துவத்தை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது. மில்லியன் கணக்கான மக்கள் கனவு காண்பதற்கு நீங்கள் கற்று கொடுத்துள்ளீர்கள். நீங்கள் வெறும் ஒரு வீரர் மட்டுமல்ல, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையின் அடையாளம்" என்று பதிவிட்டார்.

போர்ச்சுகலின் ஏமாற்றமளிக்கும் தோல்விக்கு மத்தியிலும், கால்பந்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவருக்கு ஆதரவாக நின்ற சிராஜை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.