கால்பந்து

இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலி: பலர் காயம்

இத்தாலி நாட்டில் கால்பந்து சாம்பியன்ஷிப் வெற்றிகொண்டாட்டத்தில் ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

ரோம்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி வாகை சூடிய இத்தாலி அணி நேற்று தங்கள் நாட்டுக்கு திரும்பியது. இத்தாலி அணியின் வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதையொட்டி அங்கு நடந்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காரில் சென்ற 22 வயது இளைஞர் விபத்தில் சிக்கி பலியானார். அத்துடன் மிலன் நகரில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்ததில் 15 பேர் காயம் அடைந்தனர். அதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை