image courtesy: @IndianFootball  
கால்பந்து

தெற்காசிய பெண்கள் கால்பந்து; அரையிறுதியில் தோல்வி கண்ட இந்தியா

7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

காத்மாண்டு,

7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் நேபாளத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

பின்னர் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் வங்காளதேசம் 7-1 என்ற கோல் கணக்கில் பூட்டானை பந்தாடியது. நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டியில் வங்காளதேசம்- நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்