விளையாட்டு

இந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம், ஷிவதபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், ஷிவதபா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

தினத்தந்தி

கவுகாத்தி,

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் போலந்து வீரர் கிறிஸ்டியன் செபான்ஸ்கியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீரர்கள் தீபக், கோவிந்த் குமார் சஹானி (இருவரும் 49 கிலோ), அமித் பன்ஹால், சச்சின் (இருவரும் 52 கிலோ), கவிந்தர் சிங் பிஸ்த் (56 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), ரோஹித் தோகஸ் (64 கிலோ), ஆஷிஷ், துர்யோதன் சிங் நெஜி (இருவரும் 69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), பிரிஜேஷ் யாதவ், மனிஷ் பவார் (இருவரும் 81 கிலோ), நமன் தன்வார், சுமித் சங்வான் (இருவரும் 91 கிலோ), நவீன் குமார், சதீஷ்குமார் (இருவரும் 91 கிலோவுக்கு மேல்) ஆகியோரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மேரிகோம் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை நிஹாத் ஜரீனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?