image courtesy; twitter/@BAI_Media 
பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி

இந்திய அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

சிலாங்கூர்,

மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜப்பானுடன் மோதியது. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியடைந்தாலும், இரட்டையர் பிரிவில் காயத்தின் காரணமாக விலகிய மற்றொரு இந்திய வீராங்கனைக்கு பதிலாக அஸ்வினி பொன்னப்பாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்.

மற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றனர். முடிவில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வரலாற்றில் முதல் முறையாக முன்னேறியுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்