பிற விளையாட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீராங்கனை அவனி லெகாராவுக்கு மீண்டும் பதக்கம்

பாராலி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 36 வது இடத்தில் உள்ளது.

டோக்கியோ

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலம் வென்று உள்ளார்.

டோக்கியோ பாராலி ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகாரா ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பாராலி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 36 வது இடத்தில் உள்ளது.