* சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலப்பதக்கம் வென்றார். இதனால் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தனதாக்கினார். தங்கம் வென்ற சிந்துவுக்கு ரூ.20 லட்சமும், வெண்கலம் கைப்பற்றிய சாய் பிரனீத்துக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.