* பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று ஆண்கள் பிரிவில் 2 ஆட்டங்களும், பெண்கள் பிரிவில் 2 ஆட்டங்களும் நடக்க இருந்தன. சென்னையில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக இந்த 4 ஆட்டங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) ஐ.சி.எப். உள்விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான இன்றைய ஆட்டங்கள் மாலையில் 5 மணிக்கு தொடங்கி நடைபெறும்.