* டோக்கியோவில் நேற்று தொடங்கிய ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதற்கிடையே இந்த போட்டியில் விளையாட இருந்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முழு உடல் தகுதியை எட்டாததால் கடைசி நேரத்தில் விலகி விட்டார்.