Image Courtacy: ANI 
பிற விளையாட்டு

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாத்விக் - சிராக் ஜோடி

மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியை தோற்கடித்து இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் 15-21, 5-21 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீரரான சி யு கியிடம் (சீனா) வீழ்ந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-18, 21-14 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஆரோன் சியா-சோக் வூய் யிக் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்