பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற வேண்டும் - பி.டி. உஷா

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை இந்தியா பெற வேண்டும் என்று பி.டி. உஷா கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'நமது நாட்டு வீரர்கள், பயிற்சியாளர், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் கடினமான உழைப்பால், ஹாங்சோவ் ஆசிய விளையாட்டில் புதிய வரலாறு படைத்து இருக்கிறோம். அடுத்த ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை எட்ட முடியும் என்று கருதுகிறேன்.

நாட்டின் விளையாட்டு மேம்பாட்டுக்காக மத்திய அரசு எல்லாவகையிலும் உறுதுணையாக இருக்கிறது. நமது பிரதமர் விளையாட்டு துறை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை நாம் பெற வேண்டும். டோக்கியா ஒலிம்பிக்கை விட பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நிச்சயம் அதிக பதக்கங்களை வெல்லும் என்று நம்புகிறேன். அந்த பதக்கங்கள் நாம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான காரணியாக அமையும்' என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை