பிற விளையாட்டு

இந்தியன் ஸ்குவாஷ் தொடர்: சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் ‘சாம்பியன்’

இந்தியன் ஸ்குவாஷ் தொடரில் சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் வெற்றி பெற்றனர்.

தினத்தந்தி

சென்னை,

புரபொசனல் ஸ்குவாஷ் சங்கத்தின் இந்தியன் ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் 11-7, 11-8, 11-5 என்ற நேர்செட்டில் மும்பை வீரர் அபிஷேக் பிராதனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை தன்வி கன்னா 11-5, 9-11, 7-11, 11-7, 15-13 என்ற செட் கணக்கில் சென்னையை சேர்ந்த சுனைனா குருவில்லாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பரிசளிப்பு விழாவில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகி அருண் ராஜேந்திரன், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன பொதுச்செயலாளர் சைரஸ் போஞ்சா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை