பிற விளையாட்டு

ஐ.டி.எப். டபிள்யூ35 டென்னிஸ் போட்டி: அத்கர், ரெய்னா காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, தன்னை எதிர்த்து விளையாடிய மிலனா மஸ்லென்கோவாவை 6-2, 6-1 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கலபுரகி

கர்நாடகாவின் கலபுரகி நகரில் சந்திரசேகர் பாட்டீல் ஸ்டேடியத்தில் ஐ.டி.எப். டபிள்யூ35 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீராங்கனைகள் அத்கர் மற்றும் ரெய்னா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

இந்த போட்டிகளில் ஒன்றில், அன்னா சீடிஷேவாவை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை வைஷ்ணவி அத்கர், 6-2, 6-0 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.

இதேபோன்று, இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும், தன்னை எதிர்த்து விளையாடிய மிலனா மஸ்லென்கோவாவை 6-2, 6-1 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் இந்தியா தரப்பில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.