பிற விளையாட்டு

பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள்

பளுதூக்குதலில் 73 கிலோ பிரிவை பிடிக்க மோதும் இரு இந்தியர்கள் ஜெரிமி லால்ரினுங்கா- அசிந்தா ஷெலி இடையே நேரடி போட்டி தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் 67 கிலோ எடைப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் காமன்வெல்த் விளையாட்டில் இந்த பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஜெரிமி லால்ரினுங்கா, பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி பெற 73 கிலோ எடைப்பிரிவில் கவனம் செலுத்த உள்ளார். காமன்வெல்த் விளையாட்டில் 73 கிலோ பிரிவில் இந்தியாவின் அசிந்தா ஷெலி தங்கம் கைப்பற்றி இருந்தார். ஒலிம்பிக்கை பொறுத்தவரை ஒரு எடைப்பிரிவில் ஒரு நாட்டில் இருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே 73 கிலோ எடைப்பிரிவுக்கான இடத்தை பிடிக்க லால்ரினுங்கா, அசிந்தா இடையே நேரடி போட்டி தொடங்கியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து